மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் பிடிக்கத் தவறியதை சுட்டிக்காட்டி சிலர் அவரை ஏளனம் செய்துள்ளனர்.
நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என சகலத்திலும் வல்லவரான அவர் அசத்தி வருகிறார். அது அந்த அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவி வருகிறது. கடைசியாக அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி இருந்தது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார். இருந்தாலும், இதே போட்டியில் அவர் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பிற்காக சிலர் அவரை ஏளனம் செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/0kbpUxJ