IPL 2022 | தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதில் சிக்கல்; சென்னைக்கு பின்னடைவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு தீபக் சாஹரை வாங்கியிருந்தது சென்னை அணி. கடந்த சீசன்களில் அவர் பவர்பிளே ஓவர்களில் அணிக்கு தேவைப்படும் எதிரணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுக்கும் பவுலராக அசத்தியவர். அதிரடியாக பேட்டிங் செய்யும் திறனும் படைத்தவர். பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடை பகுதியில் அவருக்கு தசை சிதைவு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் 15-வது ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளை மிஸ் செய்வார் என சொல்லப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/GXZFA7M