IPL 2022 | ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறிய அஸ்வின் - பேசுபொருளான ராஜஸ்தானின் வியூகம்

மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார் ராஜஸ்தான் வீரர் அஸ்வின். இது அந்த அணியின் வியூகம் என சொல்லப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் ஆறாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி 23 பந்துகளில் 28 ரன்களை சேர்த்திருந்தார் ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் 19-வது ஓவரில் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/JpfWBUm