IPL 2022 | உம்ரான் மாலிக், புவனேஸ்குமார்  வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் - ஹைதராபாத் அணிக்கு 152 ரன்கள் இலக்கு

மும்பை : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் அணி 151 ரன்களை சேர்த்தது.

ஐபிஎல் 15-வது சீசனின் இன்றைய 28-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், பிரப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 3வது ஓவரிலேயே 8 ரன்களுடன் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே 14 ரன்களில் பிரப்சிம்ரன் சிங்கும் வெளியேற 5 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 33 ரன்களை சேர்த்தது பஞ்சாப் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/QsPMfbi