IPL 2022 | அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சாதனை

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழி நடத்தி வருகிறார் பாண்டியா. மொத்தம் 96 ஐபில் போட்டிகளில் விளையாடி உள்ளார் அவர். ஆல்-ரவுண்டரான அவர் 1617 ரன்களும், 45 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்திக். இதனை நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பதிவு செய்திருந்தார் அவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Z43XkBI