IPL | 'நோ-பால்' சர்ச்சை; 2019 சீசனில் களத்தில் ஆங்கிரி பேர்டாக லேண்டான தோனி

மும்பை: கடந்த 2019 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் 'நோ-பால்' தொடர்பான முடிவை அறிந்து ஆவேசமடைந்த சென்னை அணியின் தோனி களத்திற்கே சென்று வாதாடினார். அந்த சம்பவம் தற்போது ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி, தோல்வியை தழுவியது டெல்லி அணி. அந்த அணி பேட் செய்த போது கடைசி ஓவரின் மூன்றாவது பந்து நோ-பால் தானா? என்ற சர்ச்சை எழுந்தது. ஏனெனில் பந்து இடுப்புக்கு மேலே எழும்பி சென்றது போல இருந்தது. ஆனால் கள நடுவர்கள் இருவரும் அது முறையான (லீகல்) பந்து என சொல்லிவிட்டனர். அந்த முடிவை அறிந்து ஆவேசமடைந்தனர் டெல்லி அணியினர். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு வெளியே வருமாறு பேட் செய்து கொண்டிருந்த தங்கள் அணி வீரர்களுக்கு சிக்னல் கொடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nQwoKRs