அப்பாவின் பாணியில் கோல் பதிவு செய்ததை கொண்டாடிய ரொனால்டோவின் மகன்

மாட்ரிட்: 12 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டியில் கோல் பதிவு செய்ததை தனது அப்பாவின் பாணியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ரொனால்டோவின் மகன். இது தந்தையைப் போல் மகன் என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.

கால்பந்தாட்ட உலகில் அதிக கோல்களை பதிவு செய்த வீரராக அறியப்படுபவர் ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டுக்காரர். கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். 37 வயதான அவருக்கு நான்கு குழந்தைகள். அதில் மூத்தவர் தான் ரொனால்டோ ஜூனியர்.11 வயதான ரொனால்டோ ஜூனியர் தற்போது 12 வயதுக்கு உட்பட்டோருக்கான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/vZN13ld