கடைசி பந்துவரை தோனி விளையாடினால் வெற்றி உறுதி: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா நம்பிக்கை

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் தோனி மட்டும் அந்த ஓவரில் 16 ரன்கள் சேர்த்து வெற்றி தேடிக்கொடுத்தார். 13 பந்துகளை சந்தித்த தோனி 28 ரன்களை விளாசியிருந்தார்.

போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா கூறும்போது, “அவர் இன்னும் ரன்கள் மற்றும் வெற்றிகளுக்காக பசியுடன் இருப்பது மிகவும் நல்லது. மட்டையுடன் அவருக்கு இன்னும் தொடர்பு உள்ளது. அவர் களத்தில் இருந்தால், அதிலும் கடைசி ஓவர் வரை இருந்தால் அணியை வெற்றி பெற வைத்து விடுவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/hFjV9X1