
புதுடெல்லி: இந்திய பேட்மிண்டன் விளையாட்டு நட்சத்திரமான சாய்னா நேவால், எதிர்வரும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டிகளை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் வரும் ஜூலை மாதமும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் வரும் செப்டம்பர் வாக்கிலும் நடைபெறவுள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பங்கேற்கும் பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கு தகுதிப் போட்டிகள் வரும் 15 முதல் 30-ஆம் தேதி வரையில் நடத்த இந்திய பேட்மிண்டன் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதில்தான் சாய்னா பங்கேற்கப் போவதில்லை என தெரிகிறது. தனது முடிவை எழுத்துபூர்வமாக இந்திய பேட்மிண்டன் சங்கத்திடம் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BtbfsjA