மும்பை: 'பல ஜாம்பவான்கள் இதனைக் கடந்து வந்துள்ளனர்' என தொடர் தோல்வி குறித்து ட்வீட் செய்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா.
'வாழ்ந்து கெட்ட குடும்பம்' என ஒரு சொலவடை உண்டு. அதுபோன்றதொரு நிலையில்தான் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை. இருந்தாலும் நடப்பு சீசனில் ஒரே ஒரு போட்டியில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. வரிசையாக 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது மும்பை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஃபார்ம் அவுட்டாகியுள்ளது மும்பை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/jWtmZE1