கொரிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

சான்சீயோன்: நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய பேட்மிண்டன் விளையாட்டு நட்சத்திரங்கள் பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் என இருவரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். வரும் 10-ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது.

தென்கொரியாவின் சான்சீயோன் நகரில் உள்ள உள்ளரங்கில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை லாரன் லாமை 21-15 21-14 என நேர் செட் கணக்கில் வென்றார் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து. அண்மையில் அவர் ஸ்விஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை எதிர்கொள்கிறார் சிந்து.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/hVAgIE3