லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பவுலர் பும்ரா உட்பட உலகின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது விஸ்டன். இது 2022 எடிஷனுக்கான அறிவிப்பாகும்.
'கிரிக்கெட் உலகின் பைபிள்' என போற்றப்படுகிறது லண்டனிலிருந்து ஆண்டுதோறும் வெளியிடப்படும் கிரிக்கெட் ரெஃபரன்ஸ் புத்தகமான விஸ்டன். இதில் ஆண்டுதோறும் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்த விவரமும் வெளியிடப்படும். 1889 முதல் இதனை விஸ்டன் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு 2022 எடிஷனுக்கான சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை விஸ்டன் அறிவித்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்த பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ti5awPy