IPL 2022 அணி அலசல் | ஸ்பெஷலிஸ்ட் இல்லா பேட்டிங் - குஜராத் டைட்டன்ஸை கரை சேர்க்குமா ஹர்திக் - நெஹ்ரா இணை?

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுடன் இணைந்து இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் இன்னொரு அணி குஜராத் டைட்டன்ஸ். கடந்த சீசன்களாக மும்பை அணியின் முக்கிய பிளேயராக இருந்த ஹர்திக் பாண்டியா அதன் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையில் புதிய பயணத்தை துவங்கவுள்ள குஜராத் அணியின் பலம், பலவீனம் என்ன?

ஏலத்தில் செயல்பாடு எப்படி? - ஏலத்துக்கு முன்னதாகவே, கேப்டன் ஹ்ர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கானை ரூ.15 கோடிக்கும் ஓப்பன் சுப்மன் கில்லை ரூ.8 கோடிக்கும் ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ். ஏலத்தின்போது, ​​டைட்டன்ஸ் மொத்தமாக ரூ.51.85 கோடி செலவிட்ட அந்த அணி நிர்வாகம் அதில், ரூ.25.25 கோடியை லாக்கி பெர்குசன், ராகுல் தெவாட்டியா மற்றும் முகமது ஷமி ஆகிய மூன்று வீரர்களை எடுப்பதற்கே கொடுத்துவிட்டது. ஜேசன் ராய்யை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்பை 2.40 கோடிக்கும் வாங்கியது. டொமினிக் டிரேக்ஸ் (1.10 கோடி), ஜெயந்த் யாதவ் (1.70 கோடி) என வாங்கிய குஜராத் டைட்டன்ஸ் அபினவ் சதராங்கனி என்ற இளம் வீரரை ரூ.2.60 கோடிக்கு வாங்கி ஆச்சரியப்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/VBwQfAZ