IPL 2022 | உத்தப்பா, ஷிவம் துபே விளாசல் - லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே 210 ரன்கள் குவிப்பு

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசனின் 7வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. பிரபோர்ன் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் டெவான் கான்வே உட்காரவைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் டாப் ஆர்டர் மாற்றம் செய்யப்பட்டது. ருதுராஜ் கெய்க்வாட் உடன் ராபின் உத்தப்பா அணியில் ஓப்பனிங்கில் இறங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/dG8HxvD