IPL 2022 | ரூ.1 கோடி அபராதம் முதல் நீக்கம் வரை - பயோ பபுள் விதிகளில் பிசிசிஐ கடுமை

மும்பை: பயோ பபுள் பாதுகாப்பு நெறிமுறைகளில் புதிய மாற்றங்களை செய்துள்ள பிசிசிஐ, வரவிருக்கும் சீசனில் அதைத் தீவிரமாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், வீரர்களுக்கு சில புதிய எச்சரிக்கை அறிவிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ளன. இதையடுத்தது வீரர்கள் அனைவரும் பயோ பபுள் பாதுகாப்பில் வீரர்கள் அனைவரும் வந்துள்ளனர். இதனிடையே, இந்த சீசனில் பயோ பபுள் கொள்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. கடந்த சீசனில் பல வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டு, பின்பு சில மாதங்கள் கழித்து துபாயில் மீண்டும் நடத்தப்பட்டது. இதனால், இந்தமுறை அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/9pkh6DE