''கிரிக்கெட் பந்துகள் உண்ணக்கூடியவை...'' - ரோஹித் சர்மா ட்விட்டர் கணக்கில் வினோத பதிவுகள்

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதன் பின்னணியில் இன்று காலை முதல் அவரின் கணக்கில் பதிவிடப்பட்டுவரும் வித்தியாசமான ட்வீட் பதிவுகள் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கில் இருந்து இன்று காலை வினோதமான ட்வீட் பதிவு செய்யப்பட்டது. முதலில், "நான் காயின் டாஸ்ஸை விரும்புகிறேன்... குறிப்பாக அவை என் வயிற்றில் முடிவடையும் போது!" என்று பதிவிட்டப்பட்டது. பின்னர் மூன்று மணிநேரம் கழித்து, "உங்களுக்குத் தெரியுமா... தேனீக்கள் சிறந்த குத்துச்சண்டை பைகளை உருவாக்குகின்றன!" என்று ஒரு பதிவும், அதற்கு பிறகான இரண்டு மணிநேரம் கழித்து, "கிரிக்கெட் பந்துகள் உண்ணக்கூடியவை... சரியா?" என்று வரிசையாக வினோதமான பதிவுகள் வெளியாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nkdcoWK