பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் தகுதிபெற்றுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்கள் சாதிக்க தவறிய நிலையில், இளம்வீரர் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் 11-ம் இடத்தில் உள்ள லக்சயா சென் நேற்று நடக்கவிருந்த காலிறுதி போட்டியில் சீனாவின் லு குவாங் ஷு-வை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால், லு குவாங் ஷு போட்டியில் இருந்து விலகிய காரணத்தால், லக்சயா சென் போட்டியிடாமலேயே அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/duWe045