பெங்களூரு டெஸ்ட்: ரிஷப்பின் அதிரடி, ஸ்ரேயாஷின் நிதானம் - வலுவான நிலையில் இந்திய அணி

பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 380 ரன்களுக்கு மேல் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்போட்டி பகலிரவாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 59.1 ஓவரில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. குஷால் மெண்டிஸ் 2, திமுத் கருணாரத்னே 4, லகிரு திமான் 8, ஏஞ்சலோ மேத்யூஸ் 43, தனஞ்ஜெயா டி சில்வா 10, ஷாரித்அசலங்கா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். திக்வெலா 12, எபுல்டேனியா ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 3, ஷமி 2, அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/6KW8hSX