'மேட்ச் பிக்ஸிங்கால் காண முடியவில்லை' - அரசியல் சூழலை ஒப்பிட்டு பேசிய இம்ரான் கான்

லாகூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகளை ஏன் நேரில் காண வரவில்லை என்பதை விளக்கியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிந்தது. இதில், இரண்டு போட்டிகளும் டிரா செய்யப்பட்டன. இரண்டாவது டெஸ்ட்டின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் தோல்வியை தவிர்த்தது அந்த அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/vQTLkWw