'உங்கள் பின்னால்தான் சிஎஸ்கேவின் பாதி ரசிகர்கள்' - ரெய்னாவுக்காக குஜராத் அணியிடம் நெட்டிசன்கள் கோரிக்கை

சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்ய வேண்டும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில், ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.

ஐபிஎல் 15-வது சீசனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் நேற்று அறிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்த ராய், கரோனா சூழலால் இருக்கும் பயோ - பப்புள் நிலையால் சோர்வடைந்துள்ளதாகவும், இந்த நேரத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடவிருப்பதாகவும் கூறி, ஐபிஎல் தொடரில் விலகும் அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்க வேண்டும் என்று இன்று காலை முதலே ரசிகர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MRFVShf