மகளிர் உலகக் கோப்பை: அசத்தல் சதம், திருப்பம் கொடுத்த பௌலிங் - மே.இ.தீவுகள் அணியை அபாரமாக வீழ்த்திய இந்தியா!

ஹாமில்டன்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இந்தியா.
நியூசிலாந்து நாட்டில் இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே, இந்தத் தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள இந்திய அணி இன்று ஹாமில்டன் நகர் மைதானத்தில் நடந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தன. இதனால், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போட்டியை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - பாட்டியா இணை துவக்கம் தந்தது. பாட்டியா 31 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டாக அவுட் ஆனார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fsOmIG0