புதுடெல்லி: ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 39 பதக்கங்களை வென்றது. கடைசி நாளில் சென்னையைச் சேர்ந்த விஷ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.
ஜோர்டானின் அம்மான் நகரில் ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்றுமுன்தினம் இளையோருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்தவிஷ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் எர்கெஷோவ்பெக்ஸாட்டை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளையில் 63.5கிலோ எடைப் பிரிவில் சோனிப்பட்டைச் சேர்ந்த வன்ஷாஜ் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானில் ஜாவோகிர் உம்மாத லீவ்வை தோற்கடித்து தங்கம் வென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ZABhaf8