'அந்த 30 பேப்பரை எழுதி டிகிரி வாங்கலாமே' - அம்மாவின் அறிவுரையால் பட்டப்படிப்பு முடித்த கேஎல் ராகுல்

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் கடந்த லாக் டவுனில் டிகிரி முடித்த கதையை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

2014ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார் கேஎல் ராகுல். இதுவரை 43 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தற்போது மூன்று ஃபார்மெட் கொண்ட இந்திய அணியின் முக்கிய தூண்களில் ஒருவர். ஐபிஎல்லில் லக்னோ அணியை வழிநடத்தி வரும் அவரின் பெயர் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் பட்டியலிலும் அடிபடுகிறது. அப்படிப்பட்டவர், கடந்த லாக் டவுன் காலத்தில் தான் தனது பட்டப்படிப்பு அதாவது டிகிரியை முடித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/N2vEkJ0