மும்பை: ஆஸ்திரேலிய தொடரில் தான் எடுத்த முடிவுக்கான பாராட்டுகளை வேறு சிலர் அனுபவித்தனர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே ஆதங்கப்பட்டுள்ளார்.
ஃபார்மின்மையால் தவித்துவரும் இந்திய அணி வீரர் அஜிங்கியா ரஹானே ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார். கடைசியாக, பார்டர்-கவாஸ்கர் தொடரில் கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை கொடுத்தவர், அதன்பிறகு சொல்லும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். இதனால், விமர்சனக் கணைகள் அவரை துளைத்தெடுத்து வருகின்றன. தனது பழைய ஃபார்முக்கு மீண்டும் திரும்ப இளம்வீரர் பிரித்திவி ஷா தலைமையில் ரஞ்சி டிராபியில் விளையாடவுள்ளார். இந்நிலையில், சில ஊடகங்களுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள ரஹானே, ஆஸ்திரேலிய தொடரில் தான் எடுத்த முடிவுகளுக்கான பாராட்டுகளை வேறு சிலர் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/K0inFJW