லாகூர்: பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்வது ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பால்க்னரின் குற்றச்சாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளை போல பாகிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல்லின் அதே பார்மெட்டை போல, பாகிஸ்தான் வீரர்களுடன் சர்வதேச வீரர்களும் கலந்துகொண்டு விளையாடுவார்கள். கடந்த பல சீசன்களாக நல்ல வரவேற்புடன் தொடர் நடந்துவருகிறது. நடப்பு சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவந்தார். கடந்த இரண்டு போட்டிகளாக அந்த அணிக்காக களமிறங்காத பால்க்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து டுவீட் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/jz6l0c2