'200 கோடி யப்பு...' - ஷாஹீன் அப்ரிடியும், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கற்பனையும்!

கராச்சி: பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் வீரர் தொடர்பாக கற்பனைக்கு எட்ட முடியாத கருத்தை தெரிவித்தால் அவரின் ட்வீட் வைரலாகி உள்ளது.

பல வருடங்களாக ஐபிஎல் புதிய திறமைகளை கண்டுபிடித்து வாய்ப்பளித்து வருகின்றது. அதேபோல் ஐபிஎல் மெகா ஏலம் பலரின் கனவுகளை, பலரின் திறமைகளுக்கு சரியான வெகுமதியை கொடுத்துள்ளது என்றால் மிகையல்ல. சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் ஏலமே அதற்கு சான்று. இந்த ஐபிஎல் ஏலத்தில் மட்டும் எண்ணற்ற எளிய பின்னணியை கொண்ட வீரர்கள் பலருக்கு தகுந்த மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் பாலில் மட்டுமே கிரிக்கெட் விளையாடிய பஞ்சாப்பின் ரமேஷ் குமார் முதல் சச்சின் மகன் அர்ஜுன் வரை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/DeS0Xn1