பயம்..தடுப்பூசி பயம்: கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய முரளி விஜய்: முஷ்டாக் அலி டி20 தொடருக்கு தேர்வில்லை

தமிழக வீரர் முரளி விஜய் இன்னும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால், சயத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
முரளி விஜய் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், தடுப்பூசி செலுத்தாத எந்த வீரரும் பயோ-பபுள் சூழலுக்குள் வரக்கூடாது என பிசிசிஐ தெரிவித்துவிட்டது. இதனால் பயோ-பபுள் சூழலுக்குள் தன்னை ஆட்படித்திக் கொள்ள முடியாது என்பதால் வேறுவழியின்றி முரளி விஜய் இந்த சீசனிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/30h8b3N