சமூக வலைதளத்தில் தாங்கள் பதிவிடும் கருத்தின் விபரீதத்தைச் சிலர் உணர்வதில்லை: தினேஷ் கார்த்திக் சாடல்

சிலர் சமூக வலைதளத்தில் தாங்கள் சொல்லும் கருத்தின் விபரீதத்தை உணராமல் பதிவிடுகிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதில் ஆர்சிபி ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் வீசிய ஒவரில்தான் நரேன் 22 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3mMZ6XX