பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தேவையா?- மத்திய அமைச்சர் கேள்வி

இருநாடுகளிடையே உறவு சரியில்லாத நிலையில் பாகிஸ்தானுடன் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தேவையா? அதனை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

துபாயில் வரும் அக்டோபர் 24 அன்று இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளன. ஆனால், காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் டி20 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2YWx9EX