மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தாக ஐபிஎல் தொடர் ஒரு காரணமா?- என்ன சொல்கிறார் சவுரவ் கங்குலி

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்தாக ஐபிஎல் டி20 தொடர் ஒரு காரணமாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடக்க இருந்தது. ஆனால், இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பரம்பருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் டாஸ் போடுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/390aWYf