
இந்திய அணியை இங்கிலாந்து அணி குறைத்து மதிப்பிட்டுவிட்டது. இந்தியத் தொடரைவிட, அடுத்துவரக் கூடிய ஆஷஸ் தொடருக்கு இனிமேல் அதிகமான கவனத்தை இங்கிலாந்து செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி வென்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுள்ளது. லார்ட்ஸில் நடந்த போட்டியிலும், ஓவலில் நடந்த ஆட்டத்திலும் 2-வது இன்னிங்ஸில் டெய்ல்என்டர்கள் பேட்ஸ்மேன்கள் சிறந்த பங்களிப்பு செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3neUJqK