
இத்தாலியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அனைத்துத் தகுதிகளுடன் மும்பை விமான நிலையம் சென்ற "இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி" வீராங்கனையை கத்தார் விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் உலக அளவிலான போட்டியில் விளையாட முடியாத வேதனையோடு ஊர் திரும்பியுள்ளார் தமிழக வீராங்கனை.
தஞ்சாவூர் மாதாக்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் தமிழக ஹாக்கி வீரர் பாஸ்கரன். இவரது இரண்டாவது மகள் பூர்ணிஷா (16). இவர் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார். பூர்ணிஷா 'இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி' விளையாட்டு வீராங்கனையாக கடந்த 11 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று, மாநில, தேசிய அளவில் ஆறு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3lkGb6h