தோனி தேவை; 2013-ம் ஆண்டிலிருந்து ஐசிசி கோப்பை ஏதும் இந்தியா வெல்லவில்லையே?- பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

2013-ம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஐசிசி சார்பில் நடத்தப்படும் எந்தவிதமான போட்டியிலும் கோப்பையை வெல்லவில்லையே. அதனால்தான் தோனி டி20 உலகக் கோப்பைக்கு ஆலோசகராக, வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனியை பிசிசிஐ நிர்வாகம் நியமித்துள்ளது. பிசிசிஐயின் நடவடிக்கை குறித்து சில கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் மிகச்சிறந்த முடிவு எனப் பாராட்டுகின்றனர், ஆனால், மற்ற சிலர் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3hAdIrT