ஒருசில ஆட்டங்களை மட்டும் வைத்து கோலியை ஒதுக்கிவிட முடியாது: அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சில போட்டிகளில் ஒழுங்காக விளையாடாமல் போனதற்காக அவரை மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தத் தொடரில் விராட் கோலி இதுவரை சரியாக ரன் சேர்க்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சுனில் கவாஸ்கர், கோலியின் ஆட்டத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3sHi2u4