
ஒலிம்பிக் போட்டியில் 1896-ல்வாள்வீச்சு அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் இந்த விளையாட்டில் தற்போது முதன்முறையாக இந்தியாவில் இருந்து பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி. இந்த ஆண்டில் ஹங்கேரியில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கொரியா அணியிடம் கால் இறுதிச் சுற்றில் ஹங்கேரி தோல்வி அடைந்தது. இதன் அடிப்படையில் சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசை (ஏஓஆர்) அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.
கோயில் பூசாரி ஆனந்த சுந்தரராமன், இல்லத்தரசி ரமணி ஆகியோருக்கு மகளாக பிறந்த சடலவாடா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி, அனைவராலும் சிஏ பவானிதேவி என அறியப்படுகிறார். தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது 10 வயதில் பவானி தேவிக்கு, வாள்வீச்சு விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. பவானி தேவி வாள்வீச்சை விருப்பப்பட்டு தேர்வு செய்யவில்லை, அதில் அவர் சிக்கிக்கொண்டார். அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போது ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வாள்வீச்சு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. பவானி தேவியின் முறை வந்த போது மற்ற விளையாட்டுகளில் ஆறு இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இதனால் வாள்வீச்சை தேர்வு செய்தார் பவானி தேவி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2VTQhSB