
1896ஆம் ஆண்டில் தொடங்கிய நவீன ஒலிம்பிக் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர்த்து எல்லாக் காலங்களிலும் நடைபெற்றுள்ளன. 1916 (முதல் உலகப் போர்), 1940, 1944 (இரண்டாம் உலகப் போர்) ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. இதேபோல 1984ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு அரங்கேறியது.
1970, 80களில் சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவிய காலம். அந்தச் சூழலில் 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. ஆனால், இந்தப் போட்டியை அமெரிக்கா புறக்கணித்தது. அதற்கு பதிலடி தர சோவியத் யூனியன் காத்திருந்தது. 1984ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்பதாக சோவியத் யூனியன் அறிவித்து பழிதீர்த்துக் கொண்டது. சோவியத் யூனியன் தலைமையிலான சில நாடுகளும், அதன் நட்பு நாடுகளும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3hLsFrS