பேட்-அடுத்தவர் மனைவி; அருவருக்கத்தக்க பேச்சு: மன்னிப்புக் கோரினார் தினேஷ் கார்த்திக்


இந்திய வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், இலங்கை, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டியின்போது அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

வீரர் பயன்படுத்தும் பேட்டையும், பக்கத்துவீட்டுக்காரர் மனைவியையும் ஒப்பிட்டு தினேஷ் கார்த்திக் பேசிய பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. தினேஷ் கார்த்திக்கின் பாலியல்ரீதியான பேச்சுக்கு அவரின் மனைவியும், தாயும் கண்டித்ததையடுத்து, மன்னிப்புக் கோரியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3whtbll