
இன்றும் நம்மூர்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், பொங்கல் விழா, குடியிருப்புச் சங்கங்களில் நடைபெறும் விழாக்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு விளையாட்டு கயிறு இழுக்கும் போட்டி. இந்தக் கயிறு இழுக்கும் போட்டி ஒலிம்பிக்கிலும் இடம் பெற்றிருந்தது என்று சொன்னால், உங்களுக்கு நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையில் கயிறு இழுக்கும் போட்டி ஒலிம்பிக்கில் விளையாடப்பட்டது.
‘டக் ஆஃப் வார்’ என்றழைக்கப்பட்ட இந்தக் கயிறு இழுக்கும் போட்டி 1900 முதல் 1920 வரை ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. இந்த விளையாட்டுப் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அணிகளை கிளப் என்றே அழைத்தார்கள். பல கிளப்புகள் ஒரே நாட்டின் பெயரில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன. 1900 பாரீஸ் ஒலிம்பிக்கில்தான் கயிறு இழுக்கும் போட்டி அறிமுகமானது. அந்த ஒலிம்பிக்கில் ஸ்வீடன், டென்மார்க், பிரான்ஸ் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/36J2oE6