வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த | மே 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை தொடர் காரணமாக, எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லை,’’என இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் புட்சர் தெரிவித்தார். இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் பங்கேற்ற வருண் சக்ரவர்த்தி(கோல்கட்டா), சகா(ஐதராபாத்), அமித் மிஸ்ரா(டில்லி) உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட, தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் போர்டுக்கு(பி.சி.சி.ஐ.,) ரூ.2,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக, எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, இலங்கையில் நடத்த பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620579948/MarkButcherEnglandIPL2021T20CricketGangulyIanChappell.html