பிப்ரவரி 17, 1982... 43 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினம் இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தது. கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கியது. இலங்கை அணியின் கேப்டன் பந்துலா வர்ணபுரா. இவர் தொடக்க வீரரும் கூட, இங்கிலாந்து கேப்டன் அனுபவமிக்க கீத் பிளெட்சர்.
இந்திய அளவில் அப்போது குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இலங்கை அணி பிரபலம். ஏனெனில் அப்போதெல்லாம் எம்.ஜே.கோபாலன் டிராபி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - இலங்கை அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறும். இதற்கான நேரலை வர்ணனையும் வானொலிகளில் ஒலிபரப்பான காலக்கட்டம் அது. எனவே, அப்போது துலிப் மெண்டிஸ், ராய் டயஸ், கல்லுபெருமா, சிதாத் வெட்டிமுனி, ரஞ்சன் மதுகள்ளே, ரவி ரத்னாயகே போன்ற வீரர்கள் தமிழ்நாட்டில் பிரபலமானவர்களே.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/hTG2ozR