விராட் கோலி நேற்று தேவையில்லாமல் ஆஸ்திரேலிய அறிமுக இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மீது மோதி வம்பு செய்தார். அதற்காக கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய மீடியா இதை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது ஏன்? என்று ரவி சாஸ்திரி காட்டமாகச் சாடியுள்ளார்.
கான்ஸ்டாஸ் நேற்று அவருக்கு கொடுத்த பணியின் படி பும்ராவை ரிவர்ஸ் ஸ்கூப்கள், தூக்கி அடித்தல் என்று டி20 பாணியில் ஆடி ஆஸ்திரேலியாவின் பும்ரா பயத்தைப் போக்கியதில் அந்த அணியின் டாப் 4 வீரர்கள் 2022-க்குப் பிறகு அரைசதம் கண்டனர். இந்நிலையில்தான் பும்ராவுக்கே இந்த கதியா? என்று ஆவேசப்பட்ட விராட் கோலி சாம் கான்ஸ்டாஸ் மீது வந்து வேண்டுமென்றே மோதினார். அதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கவும் செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய மீடியாக்கள் இதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/g9uw5NH