நாடு திரும்ப முடியாத ஷாகிப் அல் ஹசன்: முடிகிறது கிரிக்கெட் வாழ்க்கை!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன் சொந்த மண்ணில் ஆடி ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்த ஷாகிப் அல் ஹசன், நாட்டில் நிலவும் எதிர்ப்புக் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதையடுத்து ஷாகிப் அல் ஹசனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஷாகிப் அல் ஹசனுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இடது கை ஸ்பின்னர் ஹசன் முராத் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் டாக்காவில் அக்டோபர் 21-ம் தேதி தொடங்குகிறது.

நியூயார்க்கில் இருந்து டாக்காவுக்குத் திரும்பும் வழியில் துபாயில் தங்குமாறு ஷாகிப் அல் ஹசன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக போராட்டங்கள் இருந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட்டில் அவாமி லீக் அரசு பதவி விலகியிதிலிருந்தே ஷாகிப் அல் ஹசன் நாடு திரும்ப முடியாமல் அவதிப்படுகிறார். அவாமி லீக் கட்சி எம்.பி. ஷாகிப் அல் ஹசன் என்பதால் இவருக்கும் எதிர்ப்பு கடுமையாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BXT6nRg