அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்த ஆப்கன்: ஆஸி.யை வெளியேற்றியது | T20 WC

கிங்ஸ்டவுன்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 பிரிவின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் விளையாடின. இதில் 8 ரன்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கன்.

மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ஆப்கன் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம். குறிப்பிட்ட ஓவர்களுக்குள் வங்கதேசம் இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. அது இரண்டும் நடக்காத பட்சத்தில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/86e02PK