லீப்ஜிக்: ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் - எஃப்’ போட்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) போர்ச்சுகல் அணி, செக்குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-வது யூரோ கோப்பையில் விளையாடிய முதல் ஸ்டார் பிளேயர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
தன் 39-வது வயதில் யூரோ சாம்பியன்ஷிப் கோப்பையில் 6-வது முறையாகப் பங்கேற்றதும் அல்லாமல் அட்டகாசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி உலகமெங்கும் நிறைந்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு நேற்று விருந்தளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BlNWoh7