T20 WC | “கோலி, ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓபன் வேண்டும்” - வாசிம் ஜாபர் கருத்து

புதுடெல்லி: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் ஜெய்ஸ்வால் களம் காண வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

“கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்க வேண்டும் என்பது எனது கருத்து. பேட்டிங் ஆர்டரில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆடாலம். ரோகித், சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆடுவார். அதனால் அவருக்கு அந்த இடத்தில் ஆடுவதில் சிக்கல் இருக்காது” என ஜாபர் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/0IL7pjA