
லக்னோ: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 164 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியானது 18.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லக்னோ அணிக்குஇது இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியாகவும் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணிக்கு எதிரான முதல் வெற்றியாகவும் அமைந்தது.
மிதவேகப்பந்து வீச்சாளரான யாஷ் தாக்குர் 3.5 ஓவர்களை விசி ஒரு மெய்டனுடன் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி லக்னோ அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். 150 கிலோ மீட்டர்வேகத்துக்கு மேல் சீராக வீசும் மயங்க் யாதவ் ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அந்த சூழ்நிலையில் யாஷ் தாக்குர் சிறப்பாக பேட் செய்து கொண்டிருந்த ஷுப்மன் கில்லை போல்டாக்கி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் பின்னரேகுஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து தோல்வியை சந்தித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/37FnTRl