
சென்னை: சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல மறக்க முடியாத தருணங்களை தன் வசம் வைத்துள்ளவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர். கடந்த 2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி இன்னிங்ஸ் ஆடி அசத்தி இருந்தார்.
அந்த வருடம் மார்ச் 1-ம் தேதியன்று செஞ்சுரியன் பார்க்கில் இந்த போட்டி நடைபெற்றது. தொடரின் முதல் சுற்று போட்டி இது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. சயீத் அன்வர், 101 ரன்கள் பதிவு செய்து இருந்தார். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BXcxY0U