ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. நேற்று இந்திய அணி 445 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இறங்கியது. ஆனால் களமிறங்கும் முன்னரே இங்கிலாந்தின் ஸ்கோர் 5 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லை என்று ஸ்கோர் போர்டு காட்டியது, இது எதனால் என்று பலருக்கும் குழப்பமாக இருக்கலாம். இதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது.
ஆடுகளத்தில் பந்துகள் பிட்ச் ஆகும் பகுதியில் பவுலரோ, பேட்டரோ ஓடி வந்து சேதம் விளைவிப்பதாக நடுவர் உணர்ந்தால் அல்லது கண்டால் ஓரிருமுறை எச்சரிக்கை கொடுத்த பிறகு நடுவர்கள் தவறு செய்த அணிக்கு எதிராக எதிரணிக்கு 5 ரன்களை அபராதமாக வழங்கிவிட முடியும். இந்த நடைமுறை கிரிக்கெட் விதிகளில் உண்டு. நேற்று அப்படித்தான் அஸ்வின் பேட்டிங் செய்த போது எச்சரிக்கைகளையும் மீறி பிட்சில் ஓடியதால் 5 ரன்களை இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்துக்கு சாதகமாக நடுவர் வழங்கினார். அதனால் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்னரே, அதாவது முதல் பந்தை எதிர்கொள்ளும் முன்னரே இங்கிலாந்து கணக்கில் 5 ரன்கள் ஏறியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/560sLjA