ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கவுக்கு ஹார்ட் பிரேக் தந்த ஆஸி. - இந்தியாவுடன் இறுதியில் பலப்பரீட்சை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை கனவை தகர்த்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை கனவை தகர்த்தது ஆஸ்திரேலிய அணி. இதன்மூலம், வரவிருக்கும் நவம்பர் 16ம் தேதி இந்தியா உடன் பைனலில் ஆஸ்திரேலிய அணி மோதவுள்ளது உறுதியாகியுள்ளது.

213 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் அதிரடியான துவக்கம் கொடுக்க முயற்சித்தார். ஆனால், 29 ரன்களில் எதிர்பாராவிதமாக மார்க்ரம் பந்துவீச்சில் அவுட் ஆக, அடுத்துவந்த மிட்செல் மார்ஷ் பூஜ்ஜியத்தில் நடையைக்கட்டினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறியது. எனினும், விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் டிராவிஸ் ஹெட் தனது பாணியிலான ஆட்டத்தை கையிலெடுத்தார். ஸ்மித் இதற்கு உறுதுணையாக இருக்க, பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார் டிராவிஸ் ஹெட். கேசவ் மகராஜ் பந்தில் 62 ரன்களில் ஹெட் அவுட் ஆனாலும், அவர் ஆட்டமிழக்கும்போது இலக்கில் பாதியை அதாவது 106 ரன்களை எட்டியிருந்தது ஆஸ்திரேலியா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/E0Wrjq1