பாகு: இந்திய செஸ் விளையாட்டை மக்கள் கவனிக்க தொடங்குவார்கள் என தான் நினைப்பதாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு பிறகு அவர் இதனை பகிர்ந்திருந்தார்.
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டைபிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தை சேர்ந்த இந்தியாவின் 18 வயதான இளம் வீரர் பிரக்ஞானந்தா இதில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில், அவரது முயற்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். போட்டிக்கு பிறகு அவரை சூழ்ந்து கொண்ட சிறுவர்கள், அவரிடம் ஆவலாக ஆட்டோகிராப் பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/WInrKai